Archives: செப்டம்பர் 2017

உள்ளும் புறமும்

சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.

புதிய விசுவாசம்

என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

காலங்களுக்கேற்ற ஆடைகள்

நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தலைமுறை தலைமுறையாய்

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.

யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).

இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம். 

 

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.